17:24

இங்கிலாந்து பயணத்திற்கான இந்திய டெஸ்ட் கிரிக்கட் அணி வரும் ஜூலை மாதம் 2 ம் திகதி சென்னையில் தெரிவு செய்யப்படவுள்ளதாக கிரிக்கட் வாரிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஜூலை 2 ம் திகதி இந்திய, வெஸ்ட் இண்டீசுக்கு இடையேயான 2 வது டெஸ்ட் போட்டியின் கடைசி நாளுமாகும். ஸ்ரீகாந்த் தலைமையிலான 5 உறுப்பினர்கள் தெரிவு உறுப்பினர்களில் சுரேந்திர பார்வே, நரேந்திர ஹிர்வாணி ஆகியோர் தற்போது வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் போட்டிகளைப் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
ஜூலை 2 ம் திகதி இந்த இருவர், கப்டன் டோனி, பயிற்சியாளர் டன்கன் பிளெட்சர் ஆகியோருடன் ஸ்ரீகாந்த் தொலை மாநாட்டில் கலந்து கொள்வார். ஜூலை 6 - 10 ம் திகதிகளில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 3 வது டெஸ்ட் போட்டி நடைபெறுகிறது.
சச்சின் டெண்டுல்கர் இங்கிலாந்து தொடர் முழுதும் தான் விளையாடுவதாக தெரிவித்துள்ளார். யுவராஜ் சிங் உடல் தகுதி பெற்றுள்ளார். ஜாகீர் கான், சேவாக், காம்பீர் ஆகியோரும் இங்கிலாந்து பயணத்திற்குள் உடல்தகுதி பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜூலை 21 ம் திகதி லார்ட்ஸ் மைதானத்தில் முதல் டெஸ்ட் போட்டி தொடங்குகிறது. 4 டெஸ்ட் போட்டிகளுக்குப் பிறகு ஒரு "டுவென்டி 20" கிரிக்கட் போட்டி பிறகு 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் துவங்குகிறது.
