
இந்திய கிரிக்கட் அணியின் புதிய பயிற்சியாளராக ஜிம்பாப்வே நாட்டைச் சேர்ந்த டங்கன் பிளட்சர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து கிரிக்கட் வாரிய செயலாளர் சீனிவாசன் கூறுகையில், 2 ஆண்டு காலத்திற்குப் பயிற்சியாளராக பிளட்சர் நியமிக்கப்பட்டுள்ளார் என்றார். நியூசிலாந்து முன்னாள் கப்டன் ஸ்டீபன் பிளமிங், முன்னாள் ஜிம்பாப்வே வீரர் ஆண்டி பிளவர் ஆகியோரும் பயிற்சியாளர் போட்டியில் இருந்தனர். இருப்பினும் பிளட்சருக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.
அதே சமயம், பிளட்சரின் பெயரை கிர்ஸ்டன் தான் பரிந்துரைத்ததாகவும் ஒரு தகவல் கூறுகிறது. இந்திய கிரிக்கட் அணி ஜூன் 4 ம் திகதி முதல் ஜூலை 10 ம் திகதி வரை மேற்கு இந்தியத் தீவுகளில் சுற்றுப்பயணம் செய்து விளையாடவுள்ளது.
இந்த போட்டித் தொடருக்கு முன்பாகவே இந்திய அணிக்குப் புதிய பயிற்சியாளர் கிடைத்துள்ளார்.