
கொல்கத்தாவில் நேற்று நடந்த ஐ.பி.எல். போட்டியில் கொல்கத்தா-பஞ்சாப் அணிகள் மோதின. முதலில் ஆடிய பஞ்சாப் அணி 119 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய கொல்கத்தா அணி 17.2 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 120 ரன்கள் எடுத்து அபாரா வெற்றி பெற்றது.

இந்த வெற்றிக்கு எங்கள் அணியின் பந்து வீச்சே முக்கிய காரணம் ஆகும். பஞ்சாப் அணி 119க்குள் சுருண்டு விட்டதால் எங்களால் எளிதாக பேட்டிங் செய்து வெற்றி பெற முடிகிறது.
அதிலும் எங்கள் தொடக்க வீரர் மோர்கன் அதிரடியாக ஆடி நல்ல தொடக்கத்தை ஏற்படுத்தி கொடுத்தார். 15 பந்துகளை சந்தித்த அவர் 6 பவுண்டரியுடன் 28 ரன்களை எடுத்து எங்கள் அணிக்கு நல்ல வலுவை உருவாக்கினார். இதனால்தான் அடுத்து வந்த நானும், திவாரியும் நிலைத்து நின்று ஆடி வெற்றிக்குரிய ரன்களை எடுத்தோம்.
முதல் 4,5 ஓவர்களில் ஆடுவது மிகவும் சிரமமானது. ஆனால் அந்த நேரத்தில் கடும் நெருக்கடியாக இருக்கும். ஆனால் மோர்கன் எந்த சிறமும் இல்லாமல் அதிரடியாக ஆடினார்.
இப்போது இந்த வெற்றி மூலம் முன்னணி இடத்திற்கு வந்து இருக்கிறோம். தொடர்ந்து இதேபோல் மற்ற போட்டிகளிலும் 100 சதவீதம் நன்றாக ஆடி சிறப்பான இடத்துக்கு வருவோம்.இவ்வாறு அவர் கூறினார்.
பஞ்சாப் அணி கேப்டன் கில்கிறிஸ்ட் கூறும் போது, நாங்கள் இன்னும் கூடுதலாக 20 ரன்கள் எடுத்து இருக்க வேண்டும், சுழற்பந்து வீச்சால் எங்கள் வீரர்களால் சரியாக ரன் குவிக்க முடியாமல் போய் விட்டது. எனவே வெற்றியை இழந்து விட்டோம் என்றார்.