
இலங்கையில் நடக்க இருந்த "டுவென்டி-20' தொடர் ஒத்திவைக்கப்பட்டது.
ஐ.பி.எல்., தொடரைப் போல, இலங்கையில் எஸ்.எல்.பி.எல்., என்ற "டுவென்டி-20' தொடரை வரும் ஆகஸ்ட் மாதம் நடத்த இருந்தனர். இதில் ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் போன்ற அணிகளின் வீரர்கள் பங்கேற்க முன்வந்து இருந்தனர். ஆனால் பல்வேறு காரணங்களுக்காக இந்திய வீரர்கள் பங்கேற்க, இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) தடைவிதித்தது. இதனால் "டிவி' ஒளிபரப்பு உரிமை பெற, விளம்பரதாரர்கள் ஆர்வம் காட்டவில்லை. இதையடுத்து இந்த ஆண்டு தொடர் ஒத்திவைக்கப்பட்டது. இருப்பினும், உள்ளூர் வீரர்கள் பங்கேற்கும் அளவில் போட்டிகள் நடக்க உள்ளன. --