
21:44
நிதி முறைகேடுகளில் ஈடுபட்டதாக கூறி, இலங்கை கிரிக்கெட் போர்டை (எஸ்.எல்.சி.,), அந்நாட்டு அரசு திடீரென கலைத்துள்ளது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில் நேற்று முன்தினம் வெளியிட்ட அறிக்கையில், "கிரிக்கெட் போர்டுகளில் அரசியல் தலையீடு இருக்கக்கூடாது. தன்னாட்சி பெற்ற அமைப்பாக இருக்க வேண்டும்,' என, தெரிவித்து இருந்தது. இந்நிலையில் நிதி முறைகேடுகள், ஊழல்களில் ஈடுபட்டதாக கூறி, எஸ்.எல்.சி., ஐ திடீரென கலைத்துள்ளது.இதுகுறித்து இலங்கை விளையாட்டு துறையின் செய்தித் தொடர்பாளர் ஹர்சா அபேகூன் கூறுகையில்,""இலங்கை கிரிக்கெட்டை நிர்வகிக்க, வரும் ஆறு மாதங்களுக்கு தற்காலிக கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. புதியதாக கமிட்டி அமைத்துள்ளதால், முன்பு இருந்த எஸ்.எல்.சி., தானாகவே கலைந்து விட்டது. ஐ.சி.சி.,யின் புதிய விதிகளின் படி நிர்வாகிகள் தேர்வு வரும் ஜனவரியில் நடக்கும்,'' என்றார்.