
போட்டியின் போது பேட்ஸ்மேன்கள் "ரன்னர்' வாய்ப்பை, தவறாக பயன்படுத்துகின்றனர். இதனால் தான் இதை ரத்து செய்ய நேர்ந்தது,'' என, ஐ.சி.சி., தலைமை அதிகாரி ஹாருண் லார்கட் தெரிவித்துள்ளார்.
பேட்டிங்கில் காயமடையும் வீரர்கள் இனிமேல், "ரன்னர்' வைத்துக்கொள்ள முடியாது என, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) தெரிவித்தது. இதற்கு கவாஸ்கர் உள்ளிட்ட பலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதுகுறித்து ஹாருண் லார்கட் கூறியது:
ஒரு வீரர் காயமடையும் போது அல்லது 100 ரன்களுக்கு மேல் அடிக்கும் போது, சோர்வாகி விடுவதால் "ரன்னர்' பயன்படுத்தலாம். இது இயற்கை தான். ஆனால் தற்போது இந்த வாய்ப்பை அனைவரும் தவறாக பயன்படுத்துவதாக தெரிகிறது. போட்டியில் வீரர் உண்மையில் காயமடைந்துள்ளாரா என்பதை அம்பயர்கள் கவனிப்பது முடியாத காரியம்.
தவிர, பவுலர் காயமடையும் போது தொடர்ந்து அவரால் பந்து வீச முடியாது. இதைப் பார்க்கும் போது, பேட்ஸ்மேனுக்கு "ரன்னர்' முறையை ரத்து செய்தது சரியான முடிவு தான்.
இவ்வாறு ஹாருண் லார்கட் கூறினார்.