
உலகக் கிண்ண போட்டிகளை 1996 ஆம் ஆண்டு இலங்கை அணி வென்றதன் பின்னர் விளையாடிய போட்டிகள் அனைத்தும் பணத்திற்காக விளையாடப்பட்டது போன்றே உள்ளதாக இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து லோட்ஸ் பகுதியில் இடம்பெற்ற விசேட விரிவுரை நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அரசியல் தலையீடுகளற்ற விதத்தில் அனைத்து தேசிய கிரிக்கட் சபைகளும் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற ஐ.சி.சியின் தீர்மானத்தை குமார் சங்கக்கார வரவேற்றுள்ளார்.
இலங்கை கிரிக்கட் சபையின் நிர்வாகத்திறமையின்மை காரணமாக கடும் நிதி நெருக்கடிக்குள்ளாகியுள்ள நிலையில் கிரிக்கட் சபையை கலைப்பதாக விளையாட்டுத்துறை அமைச்சர் அறிவித்திருந்தார்.
இந்த வருடம் உலகக் கோப்பை கிரிக்கட் போட்டியை நடத்தியதில் அரசாங்கத்திற்கு 69 மில்லியன் அமெரிக்க டொலர் செலவு ஏற்பட்டுள்ளது.
நாம் சிறந்த நிர்வாகத்தை எதிர்பார்க்கின்றோம் என்று குமார் சங்ககார் தெரிவித்தார்.
இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்தில் சிக்கல் நிலை காணப்படுகிறது. அரசியல் தலையீட்டின் காரணமாகவே இவ்வாறான சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது என்று சங்ககார தெரிவித்துள்ளார்.
மேலும், 1996 ஆம் ஆண்டு உலகக்கிண்ணத்தினை வெற்றியீட்டுயது மிகப்பெரிய பலமாக அமைந்தாலும், அதன் பின் விளையாடிய போட்டிகள் அனைத்தும் பணத்திற்காக விளையாடப்பட்டது போன்றே உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை தான் 2 வருடங்களில் தலைவர் பதவியில் இருந்து விலகவும் இது போன்ற சிக்கல் நிலைதான் காரணம் எனவும் சங்ககார மேலும் தெரிவித்துள்ளார்.