
இலங்கை அரசியல்வாதிகள் குறித்து சங்ககரா தெரிவித்த அறிக்கை பற்றி விசாரிக்குமாறு, இலங்கை விளையாட்டு அமைச்சர் அலு<த்கமாகே உத்தரவிட்டுள்ளார்.
நிதி முறைகேடுகள், ஊழலில் ஈடுபட்டதாக கூறி, இலங்கை கிரிக்கெட் போர்டை (எஸ்.எல்.சி.,) சமீபத்தில் ஒட்டுமொத்தமாக கலைக்கப்பட்டது. இதுகுறித்து இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் சங்ககரா கூறுகையில்,"" கிரிக்கெட்டில் நாங்கள் சிறந்த நிர்வாகத்தை விரும்புகிறோம். அரசியல்வாதிகள் தொடர்பு இல்லாமல், ஒழுக்கமான ஒளிவு, மறைவு இல்லாத நிர்வாகம் தான் வேண்டும்,'' என்றார்.அமைச்சர் விசாரணை:இவரது அறிக்கை வீரர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றாலும், இலங்கை அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து இலங்கையின் செய்தி நிறுவனமான "லங்காபுவத்' வெளியிட்ட செய்தியில்,"" சங்ககராவின் அறிக்கை தேவையில்லாதது. இதுகுறித்து அவர் விளக்கம் அளிக்க வேண்டும். தவிர, சங்ககராவின் பேச்சு குறித்து விசாரிக்குமாறு, விளையாட்டு துறை அமைச்சர் அலுத்கமாகே <உத்தரவிட்டுள்ளார்,'' என,தெரிவிக்கப்பட்டுள்ளது.---