
மும்பை குண்டுவெடிப்பு தகவல் கேட்டு நான் மிகவும் அதிர்ச்சியடைந்தேன். இது என்னை வேதனையில் ஆழ்த்தியது. 3 ஆண்டுகளுக்கு முன்பு மும்பையில் தீவிரவாதிகள் தாக்கிய போது நான் மிகவும் கவலை அடைந்தேன். அதே சூழ்நிலை இப்போதும் உருவானது.
உலகில் எந்த இடத்தில் இதுபோன்ற தாக்குதல் நடந்தாலும் அது தவறான ஒன்று. கண்டிக்கத்தக்க விஷயம். இதுபோன்ற இனிமேலும் நடக்காமல் இருக்க வேண்டும் என விரும்புகிறேன்.
கடந்த தீவிரவாதிகள் தாக்குதலில் இருந்த மும்பை இயல்பு நிலைக்கு மிக வேகமாக திரும்பி விட்டது. அதேபோன்று இப்போதைய தாக்குதலில் இருந்தும் மும்பை வேகமாக இயல்பு நிலைக்கு வரும் என்று நம்புகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.