
இந்திய கிரிக்ககெட் அணியின் சாதனை மன்னன் 38 வயதான சச்சின் டெண்டுகர் சர்வதேச அரங்கில் மொத்தம் 99 சதங்கள் (டெஸ்டில் 51, ஒருநாள் போட்டி 48 சதம்) அடித்துள்ளார்.
அவர் 100வது சதத்தை எப்போது அடிப்பார் என்று கோடிக்கணக்கான கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கிறார்கள். இங்கிலாந்துக்கு எதிராக லண்டன் லோர்ட்சில் 21ம் திகதி தொடங்கும் முதலாவது டெஸ்டில் இந்த சாதனையை அவர் படைக்க வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
மே.தீவுகள் தொடரில் விளையாடாமல் குடும்பத்துடன் லண்டனுக்கு பறந்த டெண்டுகர் அங்கு மகிழ்ச்சியுடன் பொழுதை கழித்து வருகிறார். இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான அணியில் இடம் வகிக்கும் அவர் அப்படியே அணியுடன் இணைந்து கொள்கிறார்.
100வது சதம் பற்றி கேள்வி எழுப்பிய போது டெண்டுல்கர் கூறுகையில், சாதனைகள் குறித்து நான் சிந்திப்பதில்லை. இந்த கிரிக்கெட் தொடரை எப்படி உற்சாகமாக அனுபவித்து விளையாடுவது என்பது பற்றி மட்டுமே சிந்திக்கிறேன். எந்த ஒரு வெற்றியின் ரகசியமும், சாதனைகளை நோக்கி விளையாடுவதில் இருக்காது.
போட்டியை எந்த வகையில் ரசித்து விளையாடுவது என்பதில் மட்டுமே எனது எண்ணம் உள்ளது. நான் மிக உற்சாகமாக விளையாடுகிறேன் என்றால் அதன் பிறகு இயற்கையாகவே எனது விளையாட்டின் தரமும் உயர்ந்து விடும். அதுதான் முக்கியம் என்றார்.
21 ஆண்டுகளாக கிரிக்கெட் விளையாடி வரும் அவரிடம் ஓய்வு குறித்து கேட்ட போது அது பற்றிய எண்ணமே இல்லை. இப்போதைக்கு ஒவ்வொரு தருணத்தையும் நான் ரசித்து விளையாடி வருகிறேன். கிரிக்கெட்டை மேன் மேலும் எப்படி அனுபவித்து விளையாடுவது எனது ஆட்டத்தின் தரத்தை எப்படி இன்னும் மேம்படுத்துவது என்பதில் தான் எனது கவனம் உள்ளது என்றார்.