

இதுகுறித்து அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் செவாக் மிக சிறந்த ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களில் ஒருவர். அவர் எந்த கடுமையான ஆடுகளங்களிலும், தமது அதிரடி ஆட்டத்தினால் போட்டியின் நிலமையையே மற்றக்கூடிய ஒரு வீரர் என குறிப்பிட்டுள்ளார். இந்திய அணி ஆரம்ப துடுப்பாட்டக்காரர்களை நம்பியுள்ளது. சிறந்த ஆரம்பம் கிடைக்கும் பட்சத்தில் நடுவரிசை துடுப்பாட்ட வீரர்களும் அதனை சரிவர பயன்படுத்து சிறப்பான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்துவார்கள். இந்த நிலையில் மிகச் சிறந்த ஆரம்ப துடுப்பாட்டக்காரரான செவாக் விளையாடாதது மிக பெரிய ஏமாற்றமே எனவும் மகேந்திர சிங் தோணி குறிப்பிட்டுள்ளார். இதனிடையே இங்கிலாந்து குறித்து கருத்து தெரிவித்த தோணி, இங்கிலாந்து தற்போதைய நிலையில் மிக சிறப்பாக உள்ளது. அண்மைய காலங்களில் அவர்கள் மிக சிறப்பாக ஓட்டங்களை குவித்து வருகின்றனர். எனினும் இவர்களுக்கு சவாலாக இந்திய வீரர்கள் செயற்படுவார்கள் என தோணி குறிப்பிட்டார். அத்துடன் இங்கிலாந்து மைதானங்கள் சிறந்தவை என்றும் அதில் ஓட்டங்களை குவிக்கக் கூடியதாகவும் இருக்கும் எனவும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். இதனிடையே, இந்திய அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி எதிர்வரும்ம 21 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.