

இது குறித்து அவர் கூறியது, இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் 4 வது நாளில் இஷாந்த் ஷர்மா சிறப்பாகப் பந்து வீசினார். 2 வது இன்னிங்ஸில் 4 விக்கெட் வீழ்த்திய அவரை, மதிய உணவு இடைவெளிக்குப்பின் பந்து வீச டோனி அழைக்கவில்லை. இதனால் பிரையரும், பிராடும் நிலைத்து நின்று ஆடி அதிக ரன்களை குவித்து விட்டனர்.
இஷாந்த் பந்து வீசியிருந்தால் அவர்களை அவுட் ஆக்கியிருக்கலாம் என்று கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே தனக்கு ஓய்வு வேண்டுமென்று டோனியிடம் கேட்டதாக இஷாந்த் ஷர்மா தெரிவித்துள்ளார். 4 வது நாளில் தொடக்கத்தில் இருந்து 11 ஓவர்களை வீசிவிட்டேன். எனவே சிறிது ஓய்வு வேண்டுமென்று டோனியிடம் கேட்டேன். அதனால் தான் அவர் என்னை பந்து வீசுமாறு அழைக்கவில்லை என்று இஷாந்த் தெரிவித்தார்.