
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் நேற்றைய 2-வது நாள் ஆட்டத்தில் இந்திய அணி கேப்டன்
டோனி பந்து வீசினார். முன்னணி வீரர் ஜாகீர்கான் இல்லாததாலும், பவுலர்கள் பந்து வீசி சோர்வடைந்ததாலும் அவர் பந்து வீசினார்.
டோனிதானே முன் வந்து பந்து வீசியது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை கேலி-கிண்டல் செய்வது போல் இருந்தது. லார்ட்ஸ் டெஸ்டின்2-வது நாள் ஆட்டத்தில் டோனியின் இந்த முடிவை ஏற்றுக் கொள்ள இயலாது அவர் பந்து வீசி இருக்கக் கூடாது. ஜாகீர்கான் ஒரு பொறுப்பான பவுலர். தற்போது அணியில் ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு அவரே பொறுப்பு.
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆடுவதற்கு முன்பு அவர் உடல் தகுதியை பரிசோதனை செய்து இருக்க வேண்டும் அவரது உடல் தகுதி பற்றி அவருக்குத்தான் தெரியும். டெஸ்ட் போட்டியில் ஒரு நாளைக்கு 20 ஓவர் வீசுவது என்பது கடினம்தான் இதற்கு அவரே முழு பொறுப்பு. இந்தச் டெஸ்டில் இந்தியாவின் வாய்ப்பை அவர் சாகடித்து விட்டார்.
இவ்வாறு கபில்தேவ் கூறினார்.