
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் கிரிக்கட் தொடரில் டி.ஆர்.எஸ். முறையில் எல்.பி.டபிள்யூ. நீங்கலாக பிறவற்றுக்குப் பயன்படுத்த முடிவு எட்டப்பட்டுள்ளது.
இதனால் துடுப்பாட்ட வீரர்கள் ஒருவர் மட்டை கால்காப்பில் பந்து பட்டதாக நடுவர் தீர்ப்பளித்தால் மேல்முறையீடு செய்யலாம், அதாவது அந்தப் பந்து மட்டையில் படவில்லை என்பதை நிரூபிக்க மேல்முறையீடு செய்யலாம்.
மட்டையில் படவில்லை அதனால் அது எல்.பி.டபிள்யூ. என்று களத்தடுப்பு அணி மேல்முறையீடு செய்ய முடியாது. இதுதான் இந்தப் புதிய பயன்பாட்டு முறையின் ஒப்புதல்.
ஹாக்-ஐ என்ற பந்து செல்லும் திசையைக் கணிக்கும் தொழில்நுட்பத்திற்கு இங்கிலாந்து கேட்டிருந்தது ஆனால் இந்திய கிரிக்கட் வாரியம் இதற்கு ஒப்புதல் தரவில்லை.