

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளை நடத்தும் இந்திய கிரிக்கெட் வாரியத்துடன் நடத்திய பேச்சுவார்த்தையில் இந்த சமரசம் ஏற்பட்டுள்ளதாகவும், அதன் விளைவாகவே ஏற்கனவே விதித்த நிபந்தனையை சிறிலங்கா கிரிக்கெட் வாரியம் தளர்த்தியுள்ளதாகவும் செய்திகள் கூறுகின்றன.
மே 18ஆம் தேதி வரை ஐ.பி.எல். போட்டிகளில் விளையாடும் சிறிலங்கா ஆட்டக்காரர்கள், அதற்கு மறுநாள் மும்பையில் இருந்து இங்கிலாந்திற்குப் புறம்பட்டுச் செல்வார்கள். அங்கு செல்லும் சிறிலங்கா கிரிக்கெட் அணியுடன் இணைந்து, இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டிகளில் கலந்துகொள்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.