
இந்திய கிறிக்கற் அணியின் முன்னாள் தலைவர் சௌரவ் கங்குலி, இந்தியன் பிறிமியர் லீக்கின் நான்காவது போட்டித் தொடரில் விளையாடும் வாய்ப்பைப் பெறலாமென்ற எதிர்பார்ப்பு வெளியாகியுள்ளது.
கொல்கத்தா நைட் றைடர்ஸ் அணியில் விளையாடிய சௌரவ் கங்குலியை, அந்த அணி இந்த முறை பணிக்கு அமர்த்தவில்லை.
ஏனைய அணிகளும், அவரைப் பணிக்கு அமர்த்தவில்லை. அது குறித்து அவர் கவலை வெளியிட்டிருந்தார்.
இலங்கை அணியில் விளையாடும் வீரர்கள் இந்தியன் பிறிமியர் லீக் போட்டிகளில் விளையாடுவதை நிறுத்திவிட்டு எதிர்வரும் ஐந்தாம் திகதிக்கு முன்னராக நாடு திரும்பவேண்டுமென இலங்கை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளார்கள். கொச்சி அணியின் தலைவரான மஹேல ஜயவர்தன, இலங்கை திரும்பினால், கங்குலியைப் பெறுவதற்கு அந்த அணி முற்படுமெனத் தெரிவிக்கப்படுகிறது.
வீரர்களின் ஏல விற்பனை முடிவடைந்த பின்னர், கங்குலியை இணைத்துக் கொள்ள கொச்சி அணி எடுத்த முயற்சியை இந்திய கிறிக்கற் அதிகாரிகள் நிராகரித்தபோதிலும், மஹேல ஜயவர்தன நாடு திரும்பினால், அவர்கள் கங்குலிக்கு அனுமதி வழங்கக் கூடுமெனத் தெரிவிக்கப்படுகிறது
கொல்கத்தா நைட் றைடர்ஸ் அணியில் விளையாடிய சௌரவ் கங்குலியை, அந்த அணி இந்த முறை பணிக்கு அமர்த்தவில்லை.
ஏனைய அணிகளும், அவரைப் பணிக்கு அமர்த்தவில்லை. அது குறித்து அவர் கவலை வெளியிட்டிருந்தார்.
இலங்கை அணியில் விளையாடும் வீரர்கள் இந்தியன் பிறிமியர் லீக் போட்டிகளில் விளையாடுவதை நிறுத்திவிட்டு எதிர்வரும் ஐந்தாம் திகதிக்கு முன்னராக நாடு திரும்பவேண்டுமென இலங்கை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளார்கள். கொச்சி அணியின் தலைவரான மஹேல ஜயவர்தன, இலங்கை திரும்பினால், கங்குலியைப் பெறுவதற்கு அந்த அணி முற்படுமெனத் தெரிவிக்கப்படுகிறது.
வீரர்களின் ஏல விற்பனை முடிவடைந்த பின்னர், கங்குலியை இணைத்துக் கொள்ள கொச்சி அணி எடுத்த முயற்சியை இந்திய கிறிக்கற் அதிகாரிகள் நிராகரித்தபோதிலும், மஹேல ஜயவர்தன நாடு திரும்பினால், அவர்கள் கங்குலிக்கு அனுமதி வழங்கக் கூடுமெனத் தெரிவிக்கப்படுகிறது