

இது தொடர்பில் கொழும்பில் இன்றைய தினம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய டி.எம். டில்ஸான், ஐ.பி.எல் தொடரை விட, இலங்கை கிரிக்கட் முக்கியமானது என குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில் எதிர்வரும் இங்கிலாந்து தொடருக்கான 16 பேர் கொண்ட இலங்கை கிரிக்கட் அணி பெயரிடப்பட்டுள்ளது.
அணியின் தலைமைப் பொறுப்பு டி.எம்.டில்சான் தெரிவானார். அணியில் உபத்தலைவர் பெயரிடப்படவில்லை.
எனினும், தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்களில், டி.எம். டில்சான் களத்தில் இல்லாத போது, அவருக்கு பதிலாக குமாரசங்ககார அணியின் தலைவராக செயற்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் தவிர, மஹெல ஜெயவர்தன, தரங்க பரணவித்தாரன, லஹிரு திரிமன்னா, திலான் சமரவீர, தினேஸ் சந்திமால், பிரசன்ன ஜெயவர்தன, திஸ்ஸர பெரேரா, சுராஜ் ரந்தீவ், அஜந்த மெண்டிஸ், ரங்கன ஹேரத், தில்ஹார பெர்ணான்டோ, சானக வெலகெதர, சுரங்க லக்மால், மற்றும் நுவான் பிரதீப் ஆகியோர் அணியில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.