
இதனால் இந்த அணி 17 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 131 ரன்களை எடுத்தது. அடுத்து ஆடிய கொச்சி அணி 15 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 135 ரன்கள் எடுத்து எளிதான வெற்றியை பெற்றது.
இதுபற்றி சென்னை கேப்டன் டோனி கூறியதாவது:-
மழை குறுக்கீடுதான் எங்கள் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்து விட்டது. மழை காரணமாக கடைசி 3 ஓவர்களை குறைத்து விட்டனர். இந்த 3 ஓவர்களும் இருந்திருந்தால் நாங்கள் அதிக அளவு ரன்களை குவித்து இருப்போம்.
அப்போது கொச்சி அணி எங்களை வெல்வது கடினமாக இருந்திருக்கும். அணி இக்கட்டாக இருந்த நேரத்தில் மழை குறுக்கிட்டது எங்களுக்கு ஏற்பட்ட துரதிர்ஷ்டம் என்றே கருதுகிறேன். அதே நேரத்தில் கொச்சி அணி பந்து வீச்சாளர்களும் சிறப்பாக செயல்பட்டனர்.
கொச்சி அணி வெற்றிக்கு மெக்குல்லம் முக்கிய காரணமாக இருந்தார். அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவ்வாறு அவர் கூறினார். கொச்சி அணி கேப்டன் ஜெயவர்த்தனே கூறும்போது, மழை குறுக்கீடு ஆட்டத்தின் போக்கை மாற்றி விட்டது என்பதை ஏற்றுக்கொள்கிறேன்.
ஆனாலும் எங்கள் வீரர்கள் சிறப்பாக ஆடினார்கள். பார்த்தீவ் பட்டேல், மெக்குல்லம் ஆட்டம்தான் எங்கள் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது என்றார்