

எதிர்வரும் மே 14 ஆம் நாள் சிறீலங்கா துடுப்பாட்ட அணி பிரித்தானியாவின் ஒக்ஸ்பிறிட்ச் என்ற இடத்தில் தனது முதலாவது துடுப்பாட்டத்தை விளையாடவுள்ளது. சிறீலங்கா போர்க்குற்றங்களை மேற்கொண்டுள்ளதாகவும், அங்கு பல ஆயிரம் மக்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் ஐ.நா தனது அறிக்கையில் தெரிவித்துள்ள நிலையில் சிறீலங்காவின் துடுப்பாட்ட அணியை இங்கிலாந்து � வேல்ஸ் துடுப்பாட்டச்சபை புறக்கணிக்க வேண்டும் என இளையோர் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. சிம்பாபே நாடு மனித உரிமைகளை மீறியது எனக் குற்றஞ்சாட்டி, அந் நாட்டோடு கிரிகெட் விளையாடுவதை பல நாடுகள் தவிர்த்தது. அதுபோல இலங்கை அணியோடு பிரித்தானியா கிரிக்கெட் விளையாட்டில் ஈடுபடக்கூடாது என இளையோர்கள் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.
இன்னும் சில தினங்களில் பிரித்தானியா வரும் இலங்கை கிரிகெட் அணியினருக்கு, பிரித்தானிய விமானநிலையத்தில் வைத்து, மகிந்தருக்கு பாடம் புகட்டியதுபோன்றதொரு நடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டும் என பல இளையோர்கள் கருதுகின்றனர். இலங்கை கிரிகெட் அணி பிரித்தானியாவில் காலடிவைக்கும் வேளை அங்கே கறுப்புபட்டிப் போராட்டம் நடைபெறலாம் என்ற செய்திகளும் தற்போது வெளியாகியுள்ளது. அத்தோடு அவர்கள் அதனையும் மீறி விளையாடும் பட்சத்தில் மைதானத்திலும் போராட்டங்கள் நடைபெறும் எனவும் எதிர்பார்க்கபடுகிறது.இலங்கை கிரிக்கெட் அணி இன்னும் சில தினங்களில் பிரித்தானியா வரவுள்ளது. அத்தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும்.