

காமன்வெல்த் ஜோதி ஓட்டம் லண்டனில் நடந்தபோது அதற்கான ஏற்பாடுகளை செய்ததில் நடந்த முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் லண்டன் சென்று விசாரணை நடத்தியபோது, இதில் கல்மாடிக்கு தொடர்பு இருப்பதை உறுதி செய்தனர்.
அதனை தொடர்ந்து டெல்லி சி.பி.ஐ. தலைமை அலுவலகத்தில் ஆஜரான கல்மாடியிடம், 1 மணி நேரம் நடந்த விசாரணைக்கு பின் அவர் கைது செய்யபட்டார்.
அடுத்து காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கை கமிட்டி, கட்சியில் இருந்து சுரேஷ் கல்மாடியை சஸ்பெண்டு செய்து தகவல் வெளியிட்டது.
மேலும் காமன்வெல்த் விளையாட்டு போட்டி அமைப்பு குழுவில் இடம் பெற்றுள்ள சுர்ஜீத் லால் மற்றும் எ.எஸ்.வி. பிரசாத் டி.எஸ்.ஆர். விருது ஊழல் செய்தாக இருவரை கைது செய்தனர் .
இதனை தொடர்ந்து இன்று கல்மாடியை டெல்லியில் சி.பி.ஐ. தனிக்கோர்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அதில் கல்மாடி மற்றும் காமன்வெல்த் விளையாட்டு போட்டி அமைப்பு குழுவில் இடம் பெற்றுள்ள சுர்ஜீத் லால் மற்றும் எ எஸ் வி பிரசாத் ஆகியோரை 8 நாள் சி.பி.ஐ. காவலில் எடுத்து விசாரிக்கமாறு உத்தரவுவிட்டது.