

சென்னை சேப்பாக்கத்தில் இன்று நடைபெறுகின்ற ஐ.பி.எல். கிரிக்கெட் ஆட்டத்தில் தோனி தலைமை சென்னை சூப்பர் கிங்ஸ், யுவ்ராஜ் தலைமை புனே வாரியர்ஸ் அணியைச் சந்திக்கிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ் 5 போட்டிகளில் 3-இல் வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில் 8-வது இடம் வகிக்கிறது. புனே வாரியர்ஸ் 4 போட்டிகளில் 2 வெற்றிகளுடன் 7-வது நிலையில் உள்ளது.
இரண்டு அணிகளுமே வெற்றிபெற குறிவைத்து விளையாடும் என்பதால் ஆட்டம் பரபரப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று மணீஷ் பாண்டே கொச்சி அணிக்கு தன் முதல் போட்டியை விளையாடுவார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு 4 போட்டிகள் தடைக்குப் பிறகு இன்று முதல் போட்டியில் களமிறக்கப்படுவார்.
சென்னையில் நடைபெற்ற 2 போட்டிகளிலும் தோனி அணி வெற்றி பெற்றுள்ளதால் இன்றும் எதிர்பார்ப்பு பலமாக இருக்கும் என்று கருதலாம்.