
ஐபிஎல் கிரிக்கெட்டில் பெங்களூர் அணிக்காக விளையாடி வரும் இலங்கை வீரர் திலகரட்ன டில்சான் மே 11-ம் தேதியன்று நாடு திரும்புகிறார்.
டில்ஷான் இலங்கை அணிக்கு திரும்பும் தகவலை அந்நாட்டு கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை செயலாளர் நிஷாந்தா ரணதுங்கா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிசிசிஐ-யுடன் பேசி முடிவு எடுக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக இதுவரை 7 ஆட்டங்களில் விளையாடியுள்ள தில்ஷான் 120 ரன்களை எடுத்துள்ளார். ஐபிஎல்-லில் பங்கேற்றுள்ள இலங்கை வீரர்களில் 5 பேர் பாதியிலேயே திரும்புகின்றனர். ஏப்ரல் 8-ஆம் தேதி தொடங்கிய ஐபிஎல் போட்டிகள் மே 28-ம் தேதி வரை நடைபெறுகிறது.