
விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களால், இலங்கை கிரிகெட் அணியினருக்கு ஆபத்து இருப்பதாக இலங்கை தெரிவித்துள்ளது. பிரித்தானியாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ள இலங்கை துடுப்பாட்ட அணிக்கு இடையூறு விளைவிக்க அங்குள்ள புலிகள் ஆதரவு சக்திகள் திட்டமிட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில நாளேடு இலங்கை அதிகாரி ஒருவரை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டுள்ளது. மே 14ம் திகதி ஒக்ஸ்பிரிஜ் மைதானத்தில் நடைபெறவுள்ள விளையாட்டில், இலங்கை அணியோடு இங்கிலாந்து மோதவுள்ளது. இந் நிலையில் இங்கிலாந்து அணி இலங்கையோடு விளையாடக் கூடாது என்ற அழுத்தங்கள் தற்போது பிரயோகிக்கப்பட்டு வருகிறது.
இருப்பினும் போட்டிகள் நடைபெறும் பட்சத்தில் மைதானத்தில் அமைதியான எதிர்ப்பைக் காட்ட இளையோர் அமைப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளது. இந்த ஏற்பாடுகள் முனைப்போடு நடைபெற்றுவருவதை அறிந்த இலங்கை அரசு, தற்போது தனது விளையாட்டு வீரர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பது போன்ற செய்திகளை வெளியிட்டு ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் பிரித்தானிய அரசே அதற்கு பதில் கூறவேண்டும் என்பது போன்ற செய்திகளை வெளியிட்டுவருகிறது.
எது எவ்வாறு இருப்பினும் மே 14ம் திகதி நடைபெறவுள்ள கிரிக்கெட் ஆட்டத்தில் பல தமிழர்கள் கலந்துகொண்டு தமது எதிர்பைக் காட்டவுள்ளனர் என நம்பப்படுகிறது.