
இலங்கையின் முன்னாள் ரெஸ்ட் கிரிக்கெட் அணித் தலைவர் ஹசான் திலகரத்னவை கொழும்பு குற்றவிசாரணைப் பிரிவினர் இன்று விசாரணைக்கு உட்படுத்தவுள்ளனர்.
இலங்கை அணி வீரர்களின் ஆட்டநிர்ணய சதி குறித்து வாக்குமூலம் அளிக்க இன்று மாலை கொழும்பு குற்ற விசாரணைப் பிரிவிற்கு சமூகமளிக்குமாறு ஹசான் திலகரத்னவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
1992ம் ஆண்டு தொடக்கம் இலங்கை அணி வீரர்கள் ஆட்டநிர்ண சதியில் ஈடுபட்டு வந்துள்ளதாக ஹசான் திலகரத்ன அண்மையில் குற்றம் சுமத்தியிருந்தார். இது குறித்து இன்று மேல் மாகாண சபையில் விசேட உரை ஒன்றையும் அவர் ஆற்றியிருந்தார்.