
இருபது ஓவர் ஆட்டம் ஜூன் 4 ம் தேதி நடைபெறுகிறது. அதன் பிறகு ஜூன் 6 முதல் 16 வரை ஒரு நாள் ஆட்டங்களில் விளையாடவுள்ளது. அதன் பிறகு மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது.
உலகக் கோப்பை அதைத் தொடர்ந்து ஐ.பி.எல் ஆகியவற்றில் தொடர்ச்சியாக விளையாடி வருவதால் தங்களுக்கு ஓய்வு தேவை என்று இந்திய அணியின் கேப்டன் தோனி உள்ளிட்ட மூத்த வீரர்கள் கிரிக்கெட் வாரியத்திடம் கேட்டுக் கொண்டுள்ளனர். அதே சமயம் மூத்த வீரர்கள் இடம் பெறாத பட்சத்தில் ஆட்டத்தில் விறுவிறுப்பு குறைந்து விடும். மேலும் விளம்பர வருமானம் குறைந்து விடும் என்பதால் இந்த விஷயத்தில் கிரிக்கெட் வாரியம் மிகவும் கவனத்துடன் செயல்படும் என்று தெரிகிறது.