

இதன் மூலம் பெங்களூரு அணிக்கு வெற்றி இலக்கு 206 ரன்களாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.. முரளி விஜய் சிறப்பாக விளையாடி 95 ரன்கள் குவித்தார்.
ஐ.பி.எல் சீசன் 4ல் இறுதிப்போட்டி சென்னையில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டொஸ் வென்று துடுப்பெடுத்தாட முடிவு செய்தது.
இதனையடுத்து துவக்க வீரர்களாக களமிறங்கிய சென்னை அணியின் ஹசியும்இ முரளி விஜய்யும் அபார துவக்கம் தந்தனர். முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 160 ரன்கள் குவித்தது. அபாரமாக விளையாடிய ஹசி 45 பந்துகளில் 63 ரன்கள் எடுத்து சையத் முகமது பந்தில் ஆட்டமிழந்தார்.
இதன் பின்னர் விஜய்யுடன் தோனி ஜோடி சேர்ந்தார். சிறிது நேரத்தில் 188 ரன்கள் எடுத்திருந்த நிலையில் முரளி விஜய் 52 பந்துகளில் 95 ரன்களுக்கு அவுட்டாகி சதத்தை நழுவ விட்டார். அடுத்த பந்திலேயே கப்டன் தோனி 22 ரன்களுக்கு ஸ்ரீநாத் அரவிந்த பந்தில் அவுட்டானார்.
கடைசி ஓவரில் மோர்கல் 2 ரன்களுக்கும்இ ரெய்னா 8 ரன்களுக்கும் அவுட்டானார். கடைசி பந்தில் பிராவோ சிக்சர் அடித்தார். இறுதியில் சென்னை அணி 5 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்கள் எடுத்தது.
பதிலளித்த பெங்களுர் றோயல் சலஞ்சஸ் அணியால் 8 விக்கட் இழப்புக்கு 147 ஓட்டங்களையே பெற முடிந்தது. இதன் மூலம் 57 ஓட்டங்களால் சென்னை சுப்பகிங்ஸ் 2011 IPL கோப்பையை தனாக்கியது.