00:00
ஐ.பி.எல் தொடரில் இன்று நடக்கவுள்ள மற்றொரு லீக் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப், புனே வாரியர்ஸ் அணிகள் மோதுகின்றன.
இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி தோல்வியின் பிடியில் சிக்கியுள்ள புனே அணிக்கு கைகொடுக்க முன்னாள் இந்திய கப்டன் கங்குலி காத்திருக்கிறார்.
மொகாலியில் இன்று நடக்கவுள்ள ஐ.பி.எல் தொடருக்கான மற்றொரு லீக் போட்டியில் கில்கிறிஸ்ட் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, யுவராஜ் சிங் வழிநடத்தும் புனே வாரியர்ஸ் அணியை சந்திக்கிறது.
புனே அணி இதுவரை விளையாடியுள்ள ஒன்பது லீக் போட்டிகளில் 2ல் மட்டுமே வெற்றி கண்டது. தொடர்ந்து ஏழு போட்டிகளில் தோல்வி கண்ட யுவராஜ் அணி இன்று கட்டாய வெற்றியை நோக்கி களமிறங்குகிறது.
நான்காவது ஐ.பி.எல் தொடருக்கான வீரர்கள் ஏலத்தில் புறக்கணிக்கப்பட்ட முன்னாள் கொல்கத்தா அணி கப்டன் சவுரவ் கங்குலி ஒருவழியாக புனே அணியில் இடம் பிடித்தார். அனுபவ வீரரான இவர் ஐ.பி.எல் அரங்கில் ஆயிரம் ரன்களுக்கு மேல் எடுத்துள்ளார்.
எனவே தொடர் தோல்விகளால் துவண்டுள்ள புனே அணிக்கு இன்று அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி கைகொடுப்பார் என இவர் மீது அதிக எதிர்பார்ப்பு நிலவியுள்ளது.
இவரை தவிர ஜெசி ரைடர், மனீஷ் பாண்டே, ஸ்மித், ராபின் உத்தப்பா, யுவராஜ் சிங் உள்ளிட்டோர் முழுத்திறமையை வெளிப்படுத்தும் பட்சத்தில் நல்ல ஸ்கோரை பதிவு செய்து எழுச்சி பெறலாம்.
