

தோள்பட்டை காயத்துக்காக காம்பிர் "கார்டிகோ ஸ்டீராய்டு" ஊசியை போட்டுள்ளார். ஆனால் இதற்கு அவர் அனுமதி பெறவில்லை என புகார் எழுந்துள்ளது.
கொல்கத்தா அணியின் உடலியக்க நிபுணர் லீபஸ் பி.சி.சி.ஐ.க்கு எழுதிய கடிதத்தில், காம்பிர் காயத்துக்காக "கார்டிகோ ஸ்டீராய்டு" ஊசியைப் போட்டுள்ளார் என்று தெரிவித்துள்ளார். கார்கோ ஸ்டீராய்டு ஊசி, உலக ஊக்க மருந்து தடுப்பு அமைப்பால் தடை செய்யப்பட்ட மருந்துகளில் ஒன்று. எனவே விளையாட்டு வீரர்கள் அதைப் பயன்படுத்துவதற்கு முன்பு தேசிய ஊக்கமருந்து தடுப்பு அமைப்பிடமோ, உலக ஊக்க மருந்து தடுப்பு அமைப்பிடமோ முன் அனுமதி பெற வேண்டும். ஆனால் காம்பிர் அனுமதி பெறவில்லை என இப்போது தெரியவந்துள்ளது.
இந்திய விளையாட்டு மருந்துகள் சம்மேளனத்தின் தலைவர் டொக்டர் பி.எஸ்.எம்.சந்திரன் கூறுகையில், ஸ்டீராய்டு ஊசிகள் மிகவும் ஆபத்தானவை என்பதால் அதில் மருத்துவர்கள் மிகுந்த எச்சரிக்கையாக இருப்பார்கள். இந்த ஊசிகளால் தாற்காலிக நிவாரணம் மட்டுமே கிடைக்கும் என்றார்.