
புணே அணி வீரர் ஆஷிஸ் நெக்ரா காயம் அடைந்ததை அடுத்து அவருக்கு பதிலாக கங்குலி அந்த அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து புணே அணி கப்டன் யுவராஜ் சிங், எங்கள் அணிக்கு கங்குலி வருவது மிகுந்த மகிழ்ச்சி தருகிறது. அவர் மூலம் புணே அணி புதிய பலத்தை பெறும்.
கங்குலி மிகவும் அனுபவம் வாய்ந்த வீரர். எங்கள் அனைவருக்கும் வழிகாட்டியாக இருப்பார். நான் கிரிக்கட் ஆடிய தொடக்க காலத்தில் கங்குலி எனக்கு மிகவும் ஆதரவாக இருந்தார். அதனால் தான் நான் இந்த அளவுக்கு வளர்ந்திருக்கிறேன்.
கங்குலி சிறந்த அனுபவ வீரர் என்பதால் தற்போது உடல் தகுதி இல்லாமல் இருந்தாலும் சிறப்பாக ஆட முடியும் என்று நம்புகிறேன் என்று தெரிவித்தார்.