

இந்திய கிரிக்கட் அணி மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் செய்து ஒரு 20 ஓவர் போட்டி, 5 ஒருநாள் போட்டி மற்றும் 3 பயிற்சி ஆட்டங்களில் விளையாடுகிறது.
ஏற்கனவே ஒருநாள் தொடரில் ஓய்வு கொடுக்கப்பட்ட டோனி, சச்சின், ஜாகீர்கான் ஆகியோர் பயிற்சி ஆட்டத்தில் இடம் பெறுவார்கள்.
சேவாக் காயம் காரணமாக இடம்பெற மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கவுதம் காம்பீர் கப்டனாக அறிவிக்கப்பட்டார்.
தற்போது தோள்பட்டையில் காயம் காரணமாக காம்பீர் மற்றும் சேவாக், நுரையீரல் கோளாறு காரணமாக யுவராஜ் ஆகிய மூவரும் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
சுரேஷ் ரெய்னா இந்திய அணிக்கு தலைமை தாங்குகிறார். ஹர்பஜன் துணை கப்டனாக இருப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.