
கடந்த 2009ல் இந்திய அணியின் பீல்டிங் பயிற்சியாளராக இருந்த ராபின் சிங் நீக்கப்பட்டார். அதன்பின் ஆஸ்திரேலியாவின் மைக் யங் சிறிது காலம், பீல்டிங் ஆலோசகராக மட்டும் இருந்தார். இதுவரை இந்த பதவிக்கு யாரும் நியமிக்கப்பட வில்லை. இந்நிலையில் இந்திய அணியின் புதிய பயிற்சியாளர் டங்கன் பிளட்சர், மீண்டும் இப்பதவியை கொண்டுவர திட்டமிட்டுள்ளார்.
இதற்காக 2005ல் பிளட்சர் இங்கிலாந்து அணி பயிற்சியாளராக இருந்த போது அவருடன் பணியாற்றிய டிரிவர் பென்னியை (42), பரிந்துரை செய்துள்ளார். இவர் இலங்கை மற்றும் ஐ.பி.எல்., பஞ்சாப் அணியின் உதவி பயிற்சியாளராக இருந்தவர் ஆவார்.
வரும் வெஸ்ட் இண்டீஸ் தொடரின் போது, டிரிவர் பென்னி இந்திய அணியுடன் இணைந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.