

143 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன் னிங்சை விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் 4-வது நாள் ஆட்ட நேர முடிவில்6 விக்கெட் இழப்புக்கு 224 ரன் எடுத்து இருந்தது. புதுமுக வீரர் கிரீக் எட்வர்ட்ஸ் சதம் அடித்தார். சந்தர்பால் 73 ரன்னு டனும், கேப்டன் டாரன்சேமி 1 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.
நேற்று 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடந்தது. இந்திய அணி எஞ்சிய 4 விக்கெட்டை கைப்பற்றி வெற்றிக்கான இலக்கை எளிதில் எடுத்துவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னணி வீரரான சந்தர்பால் மிகவும் பொறுப்புடன் விளையாடி அந்த அணியை காப்பாற்றினார்.
ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் சேமி 17 ரன்னும், ராம்பால் 1 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். இத னால் வெஸ்ட் இண்டீஸ் 256 ரன்னில் 8 விக்கெட் விழுந்தது. ஒரு முனையில் விக்கெட் விழுந்தாலும் மறுமுனையில் இருந்த சந்தர்பால் சிறப்பாக ஆடி சதம் அடித்தார். 265 பந்துகளில் 5 பவுண்டரி யுடன் 100 ரன்னை தொட்டார்.
133-வது டெஸ்டில் விளையாடும் சந்தர்பாலுக்கு இது 24-வது சதம் ஆகும். 8-வது விக்கெட்டான சந்தர்பால்- எட்வர்ட்ஸ் ஜோடி நீண்ட நேரம் நிலைத்து நின்று ஆடியது. ஸ்கோர் 321 ஆக இருந்த போது தான் இந்த ஜோடி பிரிந்தது. எட்வர்ட்ஸ் 30 ரன் னில் ரெய்னா பந்தில் ஆட்டம் இழந்தார். 8-வது விக்கெட் ஜோடி 65 ரன் சேர்த்து அடுத்த சில நிமிடத்தில் கடைசி விக்கெட்டும் விழுந்தது.
வெஸ்ட் இண்டீஸ் அணி 131.3 ஓவரில் 322 ரன் குவித்து “ஆல்அவுட்” ஆனது. இதனால் இந்தியாவுக்கு 180 ரன் இலக்கு நிர்ணயிக் கப்பட்டது. சந்தர்பால் 116 ரன் எடுத்து கடைசிவரை ஆட்டம் இழக்காமல் இருந்தார். 501 நிமிடம் களத்தில் நின்று343 பந்துகளை சந்தித்து அவர் இந்த ரன்னை எடுத்தார். இதில் 5 பவுண்டரிகளே அடங்கும்.
அவ்வளவு தூரம் பாதுகாப்பாக ஆட்டத்தில் ஈடுபட்டார். ஹர்பஜன்சிங் 4 விக்கெட்டும், பிரவீண்குமார், ரெய்னா தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள். 47 ஓவரில் 180 ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இந்தியா 2-வது இன்னிங்சை ஆடியது. தொடக்கமே இந்தியாவுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் இருந்தது.
முதல் பந்தில் அபினவ் முகுந்த் எல்.பி.டபிள்யூ ஆனார். 2-வது விக்கெட்டுக்கு முரளிவிஜய்யுடன், டிராவிட் ஜோடி சேர்ந்தார். வெற்றி பெற வேண்டும் என்பதற்காக இந்திய வீரர்கள் போராடவில்லை. “டிரா” செய்யும் நோக்கத்திலேயே தடுப்பு ஆட்டத்தில் ஈடுபட்டனர். விஜய் 78 பந்தில் 4 பவுண்டரியுடன் 45 ரன்னும், அடுத்து வந்த ரெய்னா 8 ரன்னும் எடுத்து ஆட்டம் இழந்தனர்.
இந்திய அணி 32 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 94 ரன் எடுத்து இருந்தபோது ஆட்டம் முடித்துக்கொள்ளப்பட்டது. இதனால் இந்த டெஸ்ட் இரு தரப்புக்கும் வெற்றி- தோல்வியின்றி “டிரா”வில் முடிந்தது. டிராவிட் 34 ரன்னும், லட்சுமண் 3 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர். ராம்பால் 2 விக்கெட் கைப்பற்றினார்.
இந்த டெஸ்ட் “டிரா” வில் முடிந்ததன் மூலம் இந்தியா 1-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. ஜமைக்காவில் நடந்த முதல் டெஸ்டில் இந்தியா 63 ரன்னில் வெற்றி பெற்றது. பிரிட்ஜ் டவுனில் நடந்த 2-வது டெஸ்ட் “டிரா” ஆனது. ஒரு நாள் தொடரை இளம் வீரர்களை கொண்ட ரெய்னா தலைமையிலான அணி 3-2 என்ற கணக்கில் கைப்பற்றியது.
இதேபோல ஒரே ஒரு 20 ஓவர் போட்டியில் இந்தியா 16 ரன்னில் வெற்றி பெற்றது. வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இந்திய வீரர்கள் முத்திரை பதித்தனர். சந்தர்பால் ஆட்ட நாயகனாகவும், இஷாந்த் சர்மா தொடர் நாயகனாகவும் தேர்வு பெற்றனர்.