
சோமர்செட் அணியின் வேகப்பந்து வீசாளர் கார்ல் வில்லௌபி பயிற்சி ஆட்டத்தில் இந்திய துடுப்பாட்ட வீரர்கள் விளையாடியதை வைத்து தப்புக் கணக்கு போடாதீர்கள் என்று இங்கிலாந்தை எச்சரித்துள்ளார்.
நிச்சயம் இந்திய துடுப்பாட்டம் டெஸ்ட் போட்டியில் எழுச்சியுறும், இங்கு விளையாடியது போல் அவர்கள் டெஸ்ட் கிரிக்கட்டில் விளையாடுவார்கள் என்று நான் நினைக்கவில்லை. அங்கு இந்திய வீரர்கள் இன்னும் சவாலாகத் திகழ்வார்கள்.
டெண்டுல்கர் விக்கெட்டைத் தவிர முன்னணி வீரர்கள் விக்கெட்டுகளை அவர் வீழ்த்தினார். இங்கிலாந்தின் 6 அடி 7 அங்குல உயர பந்து வீச்சாளர் கிறிஸ் டிரெம்லெட் இந்திய வீரர்களுக்குச் சவாலாக இருப்பார் என்ற கருத்திற்குப் பதிலளித்த வில்லௌபி, டிரெம்லெட்டிடம் பவுன்ஸ் உள்ளது, ஆனால் இந்திய வீரர்கள் அதனை சிறப்பாகவே கையாள்வார்கள் என்று கருதுகிறேன்.
ராகுல், காம்பீர், சச்சின், டோனி, லட்சுமண் ஆகியோர் சிறப்பாக விளையாடி வருகின்றனர். இங்கிலாந்து பந்து வீச்சாளர்கள் சிறப்பாக வீசினாலும் துடுப்பாட்டம் மீது எனக்கு சந்தேகம் உள்ளது. இந்திய அணி சிறப்பான கிரிக்கட் ஆட்டத்தை சமீபகாலமாக விளையாடி வருகின்றனர். அதனால் தான் அவர்கள் முதல்தர நிலையை எட்டியுள்ளனர் என்று தெரிவித்துள்ளார் வில்லௌபி.
அவர் மேலும் தெரிவிக்கையில், பயிற்சி ஆட்டத்தில் இந்திய வீரர்கள் ஆட்டமிழந்த விதம் ஒரு போதும் டெஸ்ட் கிரிக்கட்டில் நிகழாது, குறிப்பாக டிராவிட் ஒரு நாளும் டெஸ்ட் போட்டியில் அந்த ஷாட்டை விளையாடப்போவதில்லை. எனவே தனக்கு 6 விக்கெட்டுகள் விழுந்தது அதிர்ஷ்டமே என்று தெரிவித்துள்ளார் அவர்.