
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான மூன்றாவது பயிற்சி போட்டியில் இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 108.2 ஓவர்களில் 347 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
முன்னதாக இரண்டாவது நாளில் மேற்கிந்தியத் தீவுகள் தனது முதல் இன்னிங்ஸில் 204 ரன்களில் ஆட்டமிழந்தது. இஷாந்த் சர்மா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பின்னர் தனது முதல் இன்னிங்ஸை விளையாடிய இந்திய அணி மூன்றாவது நாள் ஆட்டநேர முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 308 ரன்கள் எடுத்திருந்தது. தோனி 65 ரன்களுடனும், 12 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
நான்காவது நாளான சனிக்கிழமை அதிகாலையில் மழை பெய்ததால் ஆட்டம் தாமதமாகத் தொடங்கியது. தொடர்ந்து விளையாடிய இந்திய அணியில் ஹர்பஜன் மேலும் ஒரு ரன்கூட சேர்க்காமல் வெளியேறினார். இதையடுத்து வந்த பிரவீண் குமார் அதிரடியாக விளையாடினார். தோனி 74 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
பிரவீண் குமார் 23 ரன்களில் வெளியேறினார். அவர் 1 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் இந்த ரன்னை எடுத்தார். கடைசி விக்கெட்டாக இஷாந்த் சர்மா 2 ரன்களில் வெளியேற இந்தியாவின் முதல் இன்னிங்ஸ் 347 ரன்களுக்கு முடிவுக்கு வந்தது. முனாப் படேல் 4 ரன்களுடன் களத்தில் இருந்தார்.
மேற்கிந்தியத் தீவுகள் தரப்பில் எட்வர்ட்ஸ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்திய அணி முதல் இன்னிங்ஸில் மேற்கிந்தியத் தீவுகளைவிட கூடுதலாக 143 ரன்கள் எடுத்துள்ளது.
இந்திய கப்டன் தோனி மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான மூன்றாவது பயிற்சி போட்டியின் முதல் இன்னிங்ஸில் 52 ரன்களை எடுத்த போது பயிற்சி போட்டியில் 3,000 ரன்கள் குவித்து சாதனை படைத்தார். 57வது போட்டியில் அவர் இச்சாதனையை நிகழ்த்தியுள்ளார்.